வடசென்னையில் பரிதாபம்: டெங்கு காய்ச்சலால் பள்ளி சிறுமி உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி சிறுமி உயிரிழந்தார்.

வடசென்னை மூலக்கடை எருக்கஞ்சேரி கண்ணபிரான் தெருவைச் சேர்ந்தவர் மேத்யூ. இவரது மனைவி மேரி பாரதி. இவர்களின் இளைய மகள் ஜெனி ஜாஸ்மீன் (9), அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 2-ம் தேதி காய்ச்சலால் அவதிப்பட்ட மகளை தனியார் மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்தனர். காய்ச்சல் குணமாகாததால் 5-ம் தேதி அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக் டர்கள் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டிய பெற்றோர், கடந்த 7-ம் தேதி மகளை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

34 mins ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்