திருச்சி வணிக வளாகத்துக்கு சீல் வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

திருச்சி தனியார் வணிக வளாகத்துக்கு சீல் வைக்க உள்ளூர் திட்டக் குழுமத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த ஆயிஷா பேகம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: திருச்சியில் என்எஸ்பி சாலையில் செயல்படும் ரத்னா ஸ்டோரில் விதிகளை மீறி 4 மாடி கட்டிடம் கட்டப்பட்டது. இந்நிலையில் தற்போது கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு முயற்சி நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடப் பணிகளை நிறுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப்பின், கட்டுமானப்பணிகளுக்கு ஏற்கெனவே தடை விதிக்கப் பட்டுள்ளது. 2 மாடிகளை கட்ட அனுமதி பெறப்பட்டு 4 மாடி கட்டப்பட்டுள்ளது. எனவே கட்டிடத்துக்கு உடனடியாக சீல் வைக்க வேண்டும். இது தொடர்பாக ஆகஸ்ட் 16-ல் உள்ளூர் திட்ட குழும அலுவலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

26 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்