விஜய் ரசிகர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி

By செய்திப்பிரிவு

சமீபத்தில் வெளியான ஷாருக்கான் படம் தொடர்பாக விமர்சனம் செய்த பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன், விஜய்யின் ‘சுறா’ படத்துடன் அந்தப் படத்தை ஒப்பிட்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, அவருக்கு எதிராக ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டனர். சர்ச்சைக்குரிய பதிவை அவர் நீக்கிய பின்னரும் ஆபாசக் கருத்துகளை விஜய் ரசிகர்கள் பதிவிட்டதால், சென்னை காவல் ஆணையரிடம் தன்யா புகார் அளித்தார். அதன்பேரில் 2 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு, திருவண்ணாமலையை சேர்ந்த விஜய் ரசிகர் ராம்குமார், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததால், ராம்குமாரின் முன்ஜாமீன் மனுவை நீதிபதி பி.என்.பிரகாஷ் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

4 hours ago

உலகம்

5 hours ago

மேலும்