தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். சென்னை மாநகராட்சிக்கு 2 புதிய துணை ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சி இணை ஆணையராக (பணிகள்) உள்ள டாக்டர் பிங்லே விஜய் மாருதி மாற்றப்பட்டு, தொழில்துறை இணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
திருக்கோவிலூர் சார்-ஆட்சியர் சுபோத்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு, பள்ளிக் கல்வித்துறை துணைச் செயலாளராகவும், ஒசூர் சார்-ஆட்சியர் பிரவீன் பி.நாயர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை துணைச் செயலாளராகவும் நியமிக்கப்படுகின்றனர்.
நில நிர்வாக இணை ஆணையர் கே.எஸ்.கந்தசாமி, சென்னை மாநகராட்சி துணை ஆணையராகவும் (பணிகள்), திருப்பத்தூர் சார்-ஆட்சியர் சில்பா பிரபாகர், சென்னை மாநகராட்சி துணை ஆணையராகவும் (கல்வி), கோவில்பட்டி சார்-ஆட்சியர் டாக்டர் கே.விஜயகார்த்திகேயன், கோவை மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
12 mins ago
உலகம்
33 mins ago
வாழ்வியல்
52 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
3 hours ago
க்ரைம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தொழில்நுட்பம்
3 hours ago