சிங்கப்பூரில் இருந்து 4 கிலோ தங்கத்தை கடத்தி வந்தவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் விமானம் ஒன்று வந்தது. பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து வெளியே அனுப்பிக் கொண்டிருந்தனர்.
20 தங்கக்கட்டிகள்
அப்போது புதுச்சேரி காரைக்காலைச் சேர்ந்த காஜா இப்ராஹீமின் சூட்கேசை திறந்து சோதனை செய்தனர். அதன் ரகசிய அறையில் தலா 100 கிராம் எடை கொண்ட 20 தங்கக் கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவரை சோதனை செய்தபோது உள்ளாடைகளுக்குள் தலா 100 கிராம் எடை கொண்ட 20 தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.1.20 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அவரை கைது செய்து, அவருக்கும் சர்வதேச தங்கக் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
39 mins ago
இந்தியா
56 mins ago
தமிழகம்
42 mins ago
சினிமா
1 hour ago
இணைப்பிதழ்கள்
1 hour ago
வணிகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
1 hour ago
மாவட்டங்கள்
1 hour ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
2 hours ago