தவறான தொடர்பை தட்டிக்கேட்ட கணவர் கொலை: மனைவி, நண்பர் கைது

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக் கோட்டை அடுத்த தொளவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (30). பெயின்டரான இவருக்கு இந்துமதி என்பவருடன் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2 வயதில் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில், மனைவி மீது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் கடந்த 21-ம் தேதி இரவு இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனைவி கோபித்துக் கொண்டு தனது மாமியார் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அங்கு கணவர் குறித்து புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, மறுநாள் காலை மருமகள் இந்துமதியுடன் அவர்கள் சங்கரை சந்திக்கச் சென்றனர். அப் போது அங்கு வாயில் ரத்தம் வடிந்த நிலையில் சங்கர் இறந்து கிடந்ததைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, சங்கரின் தம்பி லோகநாதன் அளித்த புகாரின் பேரில் ஊத்துக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை செய்தனர்.

விசாரணையில் தெரியவந்தது குறித்து போலீஸார் கூறும்போது, “இந்து மதி, அஜித்குமார் என்பவருக்கும் இடையே தவறான தொடர்பு இருந்து வந்துள்ளது. இதையறிந்த சங்கர் மனைவியை பலமுறை கண்டித்துள் ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவம் நடந்த அன்றும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற் பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த அஜித்குமாருடன் சேர்ந்து திட்டமிட்டு குளிர்பானத்தில் விஷம் கலந்து சங்கரை குடிக்கச் செய்துள்ளனர்” என்றனர்.

ஊத்துக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து இந்துமதி, அஜித்குமாரை கைது செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

29 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

உலகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

5 hours ago

மேலும்