தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நீலகிரி ஆட்சியராக இன்னசன்ட் திவ்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக நேற்று தலை மைச் செயலர் கிரிஜா வைத்திய நாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை இணை செயலர் லட்சுமி பிரியா, அரியலூர் மாவட்ட ஆட்சியராகவும், கூட்டு றவு, உணவுத்துறை துணை செயலராக இருந்த ஜெ.இன்ன சன்ட் திவ்யா, நீலகிரி மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள் ளனர். நீலகிரி ஆட்சியராக இருந்த பி.சங்கர் பணியிடை பயிற்சி பெற செல்கிறார். அவர் பயிற்சி முடித்து வந்ததும் புதிய பணியிடம் ஒதுக்கப்படும்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குனர் கிரண் குராலா, சுகாதாரத்துறை துணை செயலாளராகவும், அப்பதவியில் இருந்த வி.ஜெய சந்திர பானு ரெட்டி, தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய மேலாண் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இமாச்சல் பிரதேச உணவுத் துறை முன்னாள் இயக்குனர் சுதா தேவி, தமிழக அரசுக்கு அயல் பணியாக வந்துள்ளார். அவர் சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
11 hours ago
விளையாட்டு
12 hours ago
இந்தியா
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago