குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வெங்கய்ய நாயுடு வுக்கு முதல்வர் கே.பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி குடி யரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் பாஜக சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு வும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் சார்பில் மகாத்மா காந்தியின் பேரன் கோபால் கிருஷ்ணகாந்தியும் போட்டியிடுகின்றனர்.
வெங்கய்ய நாயுடுவுக்கு அதிமுக இரு அணிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். அதிமுக வுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 50 எம்.பி.க்கள் உள்ளனர். எனவே, அதிமுகவின் ஆதரவு முக்கியத்துவம் வாய்ந் ததாகக் கருதப்படுகிறது.
நேரில் ஆதரவு
இந்நிலையில் குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் டெல்லி சென்ற முதல்வர் பழனிசாமி நேற்று மாலை 3.50 மணிக்கு வெங்கய்ய நாயுடுவை அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுக அம்மா அணியின் ஆதரவை தெரிவித்தார். குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். அப்போது அதிமுக கொள் கைப் பரப்புச் செயலாளரும், மக்களவை துணைத் தலைவரு மான மு.தம்பிதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஓபிஎஸ் சந்திப்பு
குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் வெங்கய்ய நாயுடுவை அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் ஆதரவை தெரிவித்தார். அப்போது தமிழக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், செ.செம் மலை, மாநிலங்களவை உறுப் பினர் வா.மைத்ரேயன், முன் னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர். குடியரசுத் தலைவராக பதவியேற்ற ராம்நாத் கோவிந்தை நேற்று முன்தினம் ஓபிஎஸ் சந்தித்து வாழ்த்து தெரி வித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
9 mins ago
கல்வி
23 mins ago
தமிழகம்
35 mins ago
கல்வி
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago