தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெப்பம் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ”கடலிலிருந்து குளிர்ந்த மேல் காற்று தரைப்பகுதிக்கு வராததே வெப்ப நிலை அதிகரிக்கக் காரணம். இன்னும் 2-3 நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பம் அதிகரித்துக் காணப்படும். 28-ம் தேதிக்கு மேல் காற்று அதிகரித்து மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 3 நாட்களாக கடல் காற்று தாமதமாக வீசி வருகிறது. மேலும் உள் தமிழகத்தில் வானத்தில் குறைவான மேகமூட்டமே காணப்படுகிறது. இதனால் தொடர்ந்து 3-வது நாளாக பல்வேறு நகரங்களில் வெயில் சுட்டெரித்தது வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
10 hours ago
விளையாட்டு
12 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago