எழும்பூர் ரயில் நிலையத்தில் இருக்கும் ஆட்டோ ப்ரீபெய்டு மையங்கள் மாலை நேரங்களில் மூடியிருப்பதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
பயணிகளின் வசதிக் காக எழும்பூர் ரயில் நிலை யத்தின் இருபுறமும் ப்ரீபெய்டு ஆட்டோ மையங்கள் திறக்கப் பட்டுள்ளன. இதை தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன் படுத்துகின்றனர்.
ஆனால், மாலை 6 மணிக் குப் பிறகு இந்த ப்ரீபெய்டு ஆட்டோ மையங்கள் இழுத்து மூடப்படுகின்றன. இதை வாய்ப் பாகப் பயன்படுத்திக் கொண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் பயணி களிடம் அதிக கட்டணம் வசூலிக் கின்றனர். இதனால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
இது தொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘எழும்பூர் ரயில் நிலையத்தில் இருபுறமும் ப்ரீபெய்டு ஆட்டோ மையம் இருக்கிறது. ஆனால், மாலை 6 மணிக்கு பிறகு மூடியி ருக்கிறது. இதனால், ஆட்டோ ஓட்டுநர்கள் பேரம் பேசி அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். அதுபோல், காலை நேரங்களில் ப்ரீபெய்டு ஆட்டோ மையத் துக்கு செல்லவே ஆட்டோ ஓட்டுநர்கள் அனுமதிப்ப தில்லை. ப்ரீபெய்டு கட்ட ணத்தை விட ரூ.25 முதல் ரூ.50 வரையில் அதிகமாக கட்டணத்தை வசூலிக்கின்ற னர். இவர்கள், பயணிகளிடம் பேரம் பேசி ஆட்டோ கட்ட ணத்தை வசூலிக்கிறார்கள். எனவே, ப்ரீபெய்டு ஆட்டோ சேவையை 24 மணி நேரமும் வழங்க வேண்டும். இங்குள்ள ஆட்டோக்களை ஒழுங்குப் படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 mins ago
வாழ்வியல்
38 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
3 hours ago
ஓடிடி களம்
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
4 hours ago