காவல் ஆய்வாளர் போல் நடித்து காதலர்களை மிரட்டி பணம் பறித்தவர் கைது

By செய்திப்பிரிவு

காவல் ஆய்வாளர் போல் நடித்து பெண்களோடு வரும் இளைஞர்களை வழி மறித்து பணம் பறித்துவந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.அயனாவரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தோழியுடன் நேற்று முன்தினம் மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். அவர் வீடு திரும்பும்போது, மற்றொரு பைக்கில் வந்த ஒரு இளைஞர் அவர்களை மறித்துள்ளார். பின்னர் தோழியுடன் வந்த இளைஞரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

இதைத் தொடர்ந்து தோழியுடன் வந்த இளைஞர், “எங்கள் பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டாம். நாளை பணத்துடன் வருகிறேன்” என்று கூறியுள்ளார். இந்நிலையில் தோழியோடு வந்த இளைஞரின் செல்போனை, ஆய்வாளர் என்று சொல்லிக்கொண்டவர் பிடுங்கி வைத்துக் கொண்டார்.

தோழியுடன் வந்த இளைஞர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்நிலை யில், நேற்று காலை காவல் ஆய்வாளர் என கூறி பணம் பெற முயன்றபோது அவரை போலீ ஸார் கைது செய்தனர். விசார ணையில், மோசடியில் ஈடுபட் டவர் திருவேற்காட்டை சேர்ந்த கார்த்திக் என்பது தெரியவந்தது.

குறுகிய காலத்தில் பணக் காரராக விரும்பிய கார்த்திக், மெரினா கடற்கரைக்கு வந்து செல்லும் காதல் ஜோடிகளிடம் தன்னை காவல் ஆய்வாளர் என்று கூறிக்கொண்டு பணம் பறிப்பதை கடந்த 2 ஆண்டுகளாக செய்து வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட கார்த்திக்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்