இளவரசி மகன் விவேக் திருமணம் சென்னையில் நடந்தது: திரைத்துறையினர், அதிகாரிகள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

இளவரசியின் மகனும் ‘ஜாஸ் சினிமாஸ்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான விவேக் திருமணம் சென்னை வானகரத்தில் நேற்று நடந்தது. சசிகலா தாலி எடுத்துக்கொடுக்க, மணமகள் கீர்த்தனாவுக்கு மணமகன் விவேக் தாலி கட்டினார்.

முன்னதாக, நேற்று முன்தினம் மாலை நடந்த வரவேற்பு நிகழ்ச் சிக்கு முதல் ஆளாக வருகை தந் தார் சசிகலா. அவரது சகோ தரர் திவாகரன் வரவேற்பு நிகழ்ச்சி களை முன்னின்று செய்தார். சசி கலாவின் அண்ணன் மகன்கள் மகாதேவன், டாக்டர் வெங்கடேஷ், டாக்டர் சிவகுமார், அனுராதா உள் ளிட்ட உறவினர்கள் கலந்து கொண்டனர். இசையமைப்பாளர் அனிருத் தலைமையில் மெல்லிசை நிகழ்ச்சி நடந்தது. நடிகர்கள் விஷால், சிவகார்த்திகேயன், பிரபு, சசிகுமார், ராம்கி, தயாரிப்பாளர்கள் அபிராமி ராமநாதன், தாணு, ஆர்.பி.சவுத்ரி, அன்புசெழியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நேற்று நடந்த திருமண விழா வுக்கு சசிகலா காலை 8 மணிக்கே வந்துவிட்டார். சசிகலா தாலி எடுத் துக்கொடுக்க, விவேக் தாலி கட்டி னார். சசிகலாவின் கணவர் எம்.நட ராஜன், திரைப்பட இயக்குநர்கள் சசிகுமார், லிங்குசாமி, இரா.சரவ ணன் ஆகியோர் கலந்துகொண்ட னர். ரமேஷ் குடாவ்லா, ரவி, ராம சுப்பிரமணி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். அமைச்சர்கள், கட்சியினர் யாரும் திருமண விழாவுக்கு அழைக்கப்பட வில்லை.

மணமக்கள் போயஸ் கார்ட னுக்கு சென்று முதல்வரிடம் வாழ்த்து பெற உள்ளனர். சொந்த ஊரான தஞ்சாவூரில் மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி வரும் செப்டம் பர் 2 ம் தேதி நடைபெற உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

இந்தியா

8 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தொழில்நுட்பம்

10 hours ago

சினிமா

11 hours ago

க்ரைம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

மேலும்