நாகை, அக்கரைப் பேட்டை, கீச்சாங்குப்பம் பகுதி களைச் சேர்ந்த 32 விசைப்படகுகளை யும், அதில் இருந்த 225 மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து கருத்து தெர்வித்துள்ள திமுக தலைவர் கருணாநிதி, தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
இலங்கைக் கடற்படை மீனவர்களை கைது செய்வது தொடர்ந்து நீடித்துக் கொண்டே போகும் நிலையில், மீனவர்கள் சந்திப்பு பற்றி தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியதாக வெளியான செய்தி தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, இதைப் பற்றி சம்பந்தப்பட்டவர்களிடமே கேட்கலாமே, என்றார்.
மேலும் நேற்று (புதன் கிழமை) நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் முதல்வர் பேசும்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாகச் சொல்லியிருப்பதைக் கேட்டு சிரிக்கத்தான் வேண்டியிருக்கிறது என கருணாநிதி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
39 mins ago
இந்தியா
33 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
52 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago