தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் 19 பேரை, இலங்கை கடற்படை இன்று காலை கைது செய்தது.
புதுகோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இந்த 19 மீனவர்களும் தமிழக கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். மீனவர்களின் ஐந்து விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை, மேஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதியின் இல்லத்துக்கு, சட்ட நடைமுறைகளுக்காகக் கொண்டுசெல்லப்பட்டதாக, யாழ்ப்பாணத்தில் உள்ள தூதர அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கை கடற்படையினரால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரியில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
22 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
உலகம்
3 hours ago
ஆன்மிகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago