அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் காவல் நிலைய ஆய்வாளரை பணி நீக்கம் செய்து டிஜிபி உத்தர விட்டுள்ளார்.
இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறியது: கயர்லாபாத் காவல் ஆய்வாளராகப் பணி யாற்றிய அலெக்ஸ்ராஜ், 2014-ல் மதுரை மாவட்ட போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளராகப் பணிபுரிந்தார். அங்கு, காரில் 250 கிலோ கஞ்சா வுடன் சென்ற மதுரை தெப்பக் குளம் பகுதியைச் சேர்ந்த காளை என்பவரது மனைவி பெருமாயி(56) உள்ளிட்ட 6 பேரை பிடித்தார்.
பிரபல கஞ்சா வியாபாரியான பெருமாயிக்கு, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இதையறிந்த அலெக்ஸ் ராஜ், ரூ.50 லட்சம் கொடுத்தால் வழக்கு பதிவு செய்யாமல் விட்டு விடுவதாகவும், இல்லையேல் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துவிடுவதாகவும், அவரது சொத்துகளைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் மிரட்டியுள்ளார். அவரிடம் பேரம் பேசிய பெருமாயி, ரூ.27 லட்சம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டுள் ளார்.
இதையடுத்து, முதல் தவ ணையாக ரூ.5 லட்சம் பெற்றுக் கொண்ட அலெக்ஸ்ராஜ், வழக்கு பதிவு செய்யாமல், பெருமாயி மற்றும் அவரது கூட்டாளிகளை விடுவித்துள்ளார். ஆனால், ஒப்புக் கொண்டபடி, மீதித் தொகையை வழங்காததால் பெருமாயியை தொடர்ந்து மிரட்டியுள்ளார் அலெக்ஸ்ராஜ்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகளிடம் பெருமாயி புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தி, அறிக்கை அளிக்குமாறு திண்டுக் கல் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி மாரி முத்துவுக்கு, அதிகாரிகள் உத்தர விட்டனர். அவர் அளித்த விசாரணை அறிக்கையில், அலெக்ஸ்ராஜ் லஞ்சம் பெற்றது உண்மை என்று தெரிவிக்கப் பட்டது. இதன்பேரில், அலெக்ஸ் ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
துறை ரீதியான விசாரணைக் குப் பிறகு, மீண்டும் அலெக்ஸ் ராஜுக்கு பணி வழங்கப்பட்டு, சில மாதங்களுக்கு முன் கயர்லாபாத் காவல் நிலைய ஆய்வாளராக அலெக்ஸ்ராஜ் நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையில், அவர் ஏற்கெனவே உதவி ஆய்வாள ராகப் பணியாற்றியபோது, பல் வேறு குற்றச்சாட்டுகள், தண் டனைகளுக்கு உள்ளானது தெரியவந்தது. இந்நிலையில், தொடர்ந்து பணியில் ஒழுங் கீனமாக செயல்பட்ட அலெக்ஸ் ராஜை பணி நீக்கம் செய்து, தமிழக காவல் துறை டிஜிபி நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
இந்தியா
19 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
38 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago