கட்சியில் படிப்படியாகப் பொறுப்புகளில் ஏற்று வரும் நிலையில், அரசியல் வாரிசாக இருப்பதற்கு தாம் வெட்கப்படவில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
காட்டுமன்னார்கோயில் நடந்த கடலூர் மாவட்ட திமுக செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியது:
"திமுக வாரிசு அரசியல் நடத்துகிறது என்று பலரும் விமர்சனம் செய்கின்றனர். திமுகவில் பணியாற்றும் இளைஞர்களின் செயல்பாடுகள் அடிப்படையில் ஒருவரின் திறமை வெளிப்படுகிறது. அவர்கள் கட்சியின் மாவட்டச் செயலராகவோ அல்லது கட்சி நிர்வாகிகளின் ஒருவராக வாரிசாக தெரியவரும்போது வாரிசு என அடையாளம் காணப்படுகிறார்.
வாரிசாக இருப்பதற்காக நாங்கள் வெட்கப்படவில்லை. அந்த வகையில் நானும் திமுகவில் படிப்படியான பொறுப்புகளை ஏற்று வருகிறேன். சிலருக்கு வாரிசுகள் இல்லை என்பதற்காக நாங்கள் என்ன செய்யமுடியும்? வாரிசுகள் இல்லாதவர்கள் பொறாமைப்படக் கூடாது.
எனது உழைப்புக் குறித்து தலைவர் (கருணாநிதி) பாராட்டியிருக்கிறார். அதுவே எனக்கு மிகப் பெரிய பெருமை. அவரது வாரிசாக இருப்பதற்கு மகிழ்ச்சியடைகிறேன்" என்றார் மு.க.ஸ்டாலின்.
திமுக பொருளாளர் ஸ்டாலினின் இந்தப் பேச்சு, திருமண விழாவில் திரண்டிருந்த தொண்டர்களிடையே கடும் சலசலப்பை ஏற்படுத்தியது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
வணிகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இணைப்பிதழ்கள்
9 hours ago
க்ரைம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago