கோவை ஜன் சதாப்தி உட்பட 3 விரைவு ரயில்களில் நிரந்தர பெட்டிகள் சேர்க்கப்பட்டு வரும் 20-ம் தேதி முதல் இயக்கப்படுகிறது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோயம்புத்தூர் மயிலாடுதுறை கோயம்புத்தூர் (12084/12083) ஜன் சதாப்தி விரைவு ரயில்களில் வரும் 20-ம் தேதி முதல் 2 முன்பதிவு பெட்டிகளும், சென்னை சென்ட்ரல் விஜயவாடா சென்னை சென்ட்ரல் ஜன் சதாப்தி விரைவு ரயில்களில் (12077/12078) 2 முன்பதிவு பெட்டிகளும் நிரந்த ரமாக இணைத்து இயக்கப்படு கிறது.
இதேபோல், திருவனந்தபுரம் கோழிக்கோடு திருவனந் தபுரம் ஜன் சதாப்தி விரைவு ரயில்களில் (12075/12076) வரும் 21-ம் தேதி முதல் ஒரு பெட்டி நிரந்தரமாக இணைத்து இயக்கப்படுகிறது.
சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 19-ம் தேதி காலை 11 மணிக்கு புறப்படும் சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (06071) நள்ளிரவு 12.15 மணிக்கு செகந்திராபாத்துக்கு செல்லும். மேற்கண்ட சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கு கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
25 mins ago
இந்தியா
40 mins ago
ஆன்மிகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
3 hours ago