பேரவை தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கு நாளை தேர்தல்

By செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவை தலைவர் பதவிக்கு பி.தனபால், துணைத் தலைவர் பதவிக்கு பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் இன்று மனுத் தாக்கல் செய்கின்றனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மாதம் 16-ம் தேதி நடந்தது. இதில், அதிமுக 134 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. திமுக கூட்டணி 98 இடங்களை பிடித்தது. புதிதாக அமைக்கப்பட்ட 15-வது சட்டப்பேரவைக்கான தலைவர், துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் 3-ம் தேதி (நாளை) நடக்கும் என தற்காலிக தலைவராக பொறுப்பேற்ற எஸ்.செம்மலை அறிவித்தார்.

பி.தனபால், ஜெயராமன் இன்று வேட்பு மனு

இத்தேர்தலுக்கான மனுத் தாக்கல் கடந்த 25-ம் தேதி தொடங்கியது. அதிமுக சார்பில் பேரவைத் தலைவர் வேட்பாளராக பி.தனபால், துணைத் தலைவர் வேட்பாளராக பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். கடந்த சட்டப்பேரவையிலும் இந்தப் பதவிகளில் இவர்களே பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு

வேட்பு மனு தாக்கல் இன்று பகல் 12 மணியுடன் முடிகிறது. எனவே, இன்று காலை அதிமுக வேட்பாளர் கள் பி.தனபால், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் மனு தாக்கல் செய்வார்கள் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. வேறு யாரும் மனு தாக்கல் செய்யாவிட்டால் இருவரும் போட்டின்றி தேர்வு செய்யப்படுவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்