மலையாள திரைப்பட இயக்குநர் சசி சங்கர் நேற்று உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவருக்கு வயது 57.
மலையாளத்தில் ‘நரயம்’, ‘குஞ்ஞிக்கூனன்’, ‘சங்கர் தாதா’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சசி சங்கர். இதில் ‘நரயம்’ படம் தேசிய விருதைப் பெற்றுள்ளது. மலையாளத்தில் திலீப்பை வைத்து இயக்கிய ‘குஞ்ஞிக்கூனன்’ படத்தை தமிழில் ‘பேரழகன்’ என்ற பெயரில் அவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் சூர்யா நாயகனாக நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து ‘பகடை பகடை’ என்ற தமிழ்ப் படத்தையும் அவர் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் கேரளாவில் கொல்லஞ்சேரி அருகே உள்ள தனது வீட்டில் நேற்று அவர் திடீரென்று சுயநினைவில்லாமல் மயங்கி விழுந்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சசி சங்கரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அவருக்கு பீனா என்ற மனைவியும், விஷ்ணு என்ற மகனும், மீனாட்சி என்ற மகளும் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
சினிமா
5 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
8 hours ago
வாழ்வியல்
8 hours ago
தமிழகம்
8 hours ago
ஆன்மிகம்
8 hours ago
கருத்துப் பேழை
9 hours ago