பாரதி யுவகேந்திரா அமைப்பால் வழங்கப்படும் யுவ கலாபாரதி மற்றும் சுவாமி விவேகானந்தர் விருதுகளுக்காக தகுதியான மாணவ மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனர் அரிமா நெல்லை பாலு விடுத்துள்ள அறிக்கை: படிப்பு மற்றும் பாட்டு, நடனம், கவிதை, பேச்சு உள்ளிட்ட இதர தனித் திறமைகளில் சிறந்து விளங்கும் எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ - மாணவியருக்கு யுவ கலாபாரதி விருதும், கல்லூரி மாணவ - மாணவியருக்கு சுவாமி விவே கானந்தர் விருதும் பாரதி யுவகேந்திராவின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.
விருதுக்குத் தகுதியான மாணவர்கள் தங்களது சாதனை குறித்த சான்றிதழ்களுடன் ’பாரதி யுவ கேந்திரா, எஃப் 171, சாந்தி சதன் குடியிருப்பு, கோச்சடை, மதுரை 625 016’ என்ற முகவரிக்கு இம்மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பொதுத் தேர்வுகளில் சாதனை படைத்தவர்களும் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
சினிமா
9 mins ago
தமிழகம்
31 mins ago
இந்தியா
29 mins ago
வாழ்வியல்
48 mins ago
சுற்றுலா
51 mins ago
வணிகம்
6 hours ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago