தவறான சிகிச்சையால் பெண் பலி: போலி மருத்துவர் சிக்கினார்- முன்ஜாமீன் பெற்று கிளினிக் நடத்தியது அம்பலம்

By செய்திப்பிரிவு

முன்ஜாமீன் பெற்றதால் போலி மருத்துவரை கைது செய்ய முடியாத நிலையில், அவர் அளித்த தவறான சிகிச்சையால் காஞ்சி புரம் அருகே பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார். இதை யடுத்து அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், பவுஞ் சூர் அடுத்த கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்தாஸ். இவருடைய மனைவி அஞ்சலை (40). இவருக்கு கடந்த 4 நாட்களாக காய்ச்சல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், பவூஞ்சூர் பகுதியில் உள்ள மருத்துவர் விஜயகுமார் என்பவரிடம் நேற்று முன்தினம் சிகிச்சைக்குச் சென்றார். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர் ஊசி போட்டுள்ளார். பின்னர், வீடு திரும்பிய அஞ்சலைக்கு உடல்நிலை மேலும் மோசமானதாக கூறப்படுகிறது. இதனால், மீண்டும் விஜயகுமாரிடம் சென்றபோது அவர், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என கூறியுள்ளார். இதையடுத்து, பவுஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த போதே அஞ்சலை இறந்தார்.

இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் விஜயகுமார் வீட்டை முற்றுகையிட முயன்றனர். தகவல் அறிந்து சென்ற போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தினர். மேலும், அஞ்சலையின் கணவர் ராம்தாஸ் அளித்த புகாரின் பேரில் அணைக்கட்டு போலீஸார் மருத் துவர் விஜயகுமாரை நேற்று கைது செய்தனர். விசாரணையில் அவர் போலி மருத்துவர் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: விஜயகுமார் மருத்து வக் கல்வி படிக்காமலேயே மருத்துவம் பார்த்து வந்தது எங்க ளுக்கு தெரியாது. 10 ஆண்டு களுக்கும் மேலாக அவர் இங்கு மருத்துவம் பார்த்து வருகிறார். காய்ச்சலுக்கு அவர் ஊசி போட்ட நிலையில் அஞ்சலை இறந் துள்ளார். தவறான சிகிச்சை காரணமாகவே அஞ்சலை இறந் துள்ளதாக அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் தெரி வித்துள்ளனர் என்றனர்.

இதுகுறித்து, இணை இயக்குநர் (மருத்துவம்) முரளி கிருஷ்ணன் கூறும்போது, ‘மருத்து வக் குழுவினர் நடத்திய ஆய்வின் போது, விஜயகுமார் போலி மருத்துவர் என்பது தெரிந்தது. இதைதொடர்ந்து, அவரை கைது செய்யுமாறு அணைக்கட்டு போலீ ஸில் கடந்த மாதம் புகார் அளிக்கப் பட்டது. ஆனால், அவர் முன் ஜாமீன் பெற்றதால் அவரை போலீ ஸாரால் கைது செய்ய முடிய வில்லை.

இந்நிலையில், அவர் அளித்த தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார் கூறப்படுகிறது. செய்யூர் மற்றும் மதுராந்தகம் வட்டத்தில், ஆய்வின்போது கண்டு பிடிக்கப்படும் போலி மருத்து வர்கள் முன்ஜாமீன் பெற்று தப்பு வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனால், இதுதொடர் பாக சுகாதாரத்துறை உயர் அதி காரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளோம்’ என்றார்.

போலி மருத்துவர் என அம்பலப்பட்டும் முன்ஜாமீன் பெற்றுக்கொண்டு தொடர்ந்து மருத் துவம் பார்த்ததால்தான் பெண் பரிதாபமாக உயிரிழக்க நேர்ந்தது. கடந்த மாதமே அவர் கைது செய்யப்பட்டிருந்தால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

23 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்