பன்றிக் காய்ச்சலுக்கான மாத்திரைகள் குறித்து அமைச்சர் விளக்கம்

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவையில், பழனி தொகுதி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் பழனி தொகுதியில் சுகாதாரக் கேடு தொடர் பாகவும், தொற்று நோய் தொடர்பாக வும் நடவடிக்கை எடுக்கும்படி சுகாதாரத்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்தார்.

அப்போது குறுக்கிட்ட எதிர்க் கட்சித் துணைத்தலைவர் துரை முருகன், ‘‘பன்றிக் காய்ச்சலுக்கு வழங்கப்படும் மாத்திரை சில இடங்களில் கிடைக்கவில்லை. இந்த கட்டுப்பாடு ஏன்?’’ என்றார்.

இதற்கு பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ‘‘நாங்கள் எதையும் கட்டுப்படுத்த வில்லை. 12 லட்சம் டாமின்புளூ மாத் திரைகள், மருந்து (சிரப்) ஆகியவை இருப்பு உள்ளன. தனியார் மருத்துவ மனைகளுக்கும் நாங்கள் வழங்கி வருகிறோம். ஒரு தெரு வில் ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டால் தடுப்பு மருந்து அளிக்கிறோம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்