சட்டப்பேரவையில், பழனி தொகுதி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் பழனி தொகுதியில் சுகாதாரக் கேடு தொடர் பாகவும், தொற்று நோய் தொடர்பாக வும் நடவடிக்கை எடுக்கும்படி சுகாதாரத்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்தார்.
அப்போது குறுக்கிட்ட எதிர்க் கட்சித் துணைத்தலைவர் துரை முருகன், ‘‘பன்றிக் காய்ச்சலுக்கு வழங்கப்படும் மாத்திரை சில இடங்களில் கிடைக்கவில்லை. இந்த கட்டுப்பாடு ஏன்?’’ என்றார்.
இதற்கு பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ‘‘நாங்கள் எதையும் கட்டுப்படுத்த வில்லை. 12 லட்சம் டாமின்புளூ மாத் திரைகள், மருந்து (சிரப்) ஆகியவை இருப்பு உள்ளன. தனியார் மருத்துவ மனைகளுக்கும் நாங்கள் வழங்கி வருகிறோம். ஒரு தெரு வில் ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டால் தடுப்பு மருந்து அளிக்கிறோம்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
13 mins ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
2 hours ago