அரசு விழாவில் அமைச்சரின் முன்பு அதிகாரிகள் பற்றி பகிரங்கமாக புகார் கூறிய அதிமுக எம்.எல்.ஏ. மாதேஸ்வரனின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது.
சேலம் புறநகர் மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞர் அணித் தலைவர் பொறுப்பில் இருந்து மாதேஸ்வரன் நீக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை முதல்வரும் கட்சிப் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த அரசு விழாவில், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி பங்கேற்றார்.
இந்த விழாவுக்கு வந்திருந்த ஆத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மாதேஸ்வரன், பொதுமக்கள் மத்தியில் அதிகாரிகள் பற்றி அமைச்சரிடம் புகார் கூறினார்.
தனது தொகுதியில் நடக்கும் அரசு விழாக்கள் குறித்து அதிகாரிகள் தகவல் தெரிவிப்பதில்லை என்றும், வேண்டுமென்றே அதிகாரிகள் தன்னை ஒதுக்குவதாகவும் கூறினார். அவரை அதிகாரிகளும் அமைச்சரும் சமாதானப்படுத்தினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
வாழ்வியல்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
3 hours ago