அமைச்சர்கள் அனைவரும் பதவியை தக்கவைத்துக்கொள்ள திட்டமிட்டு நாடகம் நடத்துகின்றனர். அவர்கள் எடுத்த முடிவு கட்சியின் முடிவு அல்ல என்று வெற்றிவேல் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்தில் மூத்த அமைச்சர்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடைபெற்றது. அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, வீரமணி, அன்பழகன், சி.வி.சண்முகம், பெஞ்சமின், ஆர்.பி. உதயகுமார் மற்றும் எம்.பி. வைத்திலிங்கம் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.
ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ''தினகரனையும், அவர் சார்ந்த குடும்பத்தையும் முழுமையாக ஒதுக்கிவைக்கிறோம். தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக் கூடாது'' என்றார்.
இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் எம்.எல்.ஏ, ''அமைச்சர்கள் அனைவரும் பதவியை தக்கவைத்துக்கொள்ள திட்டமிட்டு நாடகம் நடத்துகின்றனர். அவர்கள் எடுத்த முடிவு கட்சியின் முடிவு அல்ல'' என்றார்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 hour ago
இந்தியா
7 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
13 mins ago
ஆன்மிகம்
23 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
6 hours ago
சினிமா
8 hours ago
விளையாட்டு
9 hours ago
வணிகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago