ஜூன் 14 தொடங்கி ஜூலை 19 வரை தமிழக சட்டப்பேரவை நடைபெறும்: சபாநாயகர் தனபால் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

ஜூன் 14-ம் தேதி தொடங்கும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூலை 19-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்று முடிவு செய்வதற்கான அலுவல் ஆய்வு கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று (புதன்கிழமை) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அவை முன்னவர் செங்கோட்டையன், திமுக சட்டமன்ற கட்சி துணை தலைவர் துரைமுருகன் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தின் முடிவில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவதற்கு தேவைப்படும் நேரத்தை தீர்மானித்து அதற்கு 24 நாட்கள் தேவைப்படுவதால் ஜூன் 14ம் தேதி தொடங்கும் பேரவையை ஜூலை 19ம் தேதி வரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்