திருவள்ளூரில் டாஸ்மாக் மதுபானக் கடையின் சுவரில் துளையிட்டு பணம் திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இக்கடையின் வழியாக நேற்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள் கடையின் பின்புற சுவர் துளையிடப்பட்டு இருந்ததைக் கண்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
செவ்வாப்பேட்டை போலீஸார் மற்றும் டாஸ்மாக் கடை ஊழியர்கள் விரைந்து வந்து பாத்தபோது, ரூ.3 ஆயிரத்து 500 பணம் திருடு போயிருந்தது. ரூ.8 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் சேதமடைந்திருந்தன. முன்னதாக, ரூ.3 லட்சம் பணத்தை வங்கியில் செலுத்த ஊழியர்கள் எடுத்துச் சென்றுவிட்டதால் அந்த பணம் தப்பியது. இந்த சம்பவம் குறித்து செவ்வாப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 mins ago
இந்தியா
14 mins ago
கல்வி
35 mins ago
தமிழகம்
39 mins ago
சினிமா
56 mins ago
தொழில்நுட்பம்
1 hour ago
இந்தியா
43 mins ago
இந்தியா
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago