ஓ.பன்னீர்செல்வம் மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று முன்தினம் தனது கோபிசெட்டிப் பாளையம் தொகுதிக்கு வந்தார். அவருக்கு தொகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்துவார்கள் என போலீஸார் கருதினர்.

இதையொட்டி, அவரது பயண பாதையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கோவை யில் இருந்து கோபிக்கு காரில் வந்த செங்கோட்டையனுக்கு வழி யோர கிராமங்களில் பொதுமக்கள் அமைதியான முறையில் வரவேற்பு அளித்தனர்.

ஜெயலலிதாவைப் பார்த்தேன்

இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை முன்னாள் முதல் வர் ஜெயலலிதா பிறந்தநாளை யொட்டி கோபியில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் செங்கோட்டை யன் பேசியதாவது:

அப்போலோ மருத்துவமனை யில் ஜெயலலிதா அனுமதிக்கப் பட்டு இருந்தபோது, 72 நாட்களும் நான் அவருடன் இருந்தேன். அவ ருக்கு அங்கு உலகத் தரத்தினாலான சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போன்ற படத்தை வெளியிட ஜெயலலிதா விரும்ப வில்லை. சிகிச்சையின்போது கண் ணாடி அறையில் இருந்த ஜெய லலிதாவை நான் பார்த்தேன். அப் போது, தான் நன்றாக இருப்பதை தெரிவிக்கும் வகையில் கட்டை விரலை உயர்த்திக் காட்டினார்.

அதிமுகவின் எதிரியான திமுகவுடன் கைகோத்து ஓ.பன்னீர் செல்வம் செயல்படுகிறார். இதனை கட்சித் தொண்டர் களும், பொதுமக்களும் புரிந்து கொண்டுள்ளனர் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

47 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்