தமிழகத்தில் 100 மாவோயிஸ்ட்கள் பதுங்கல்: க்யூ பிரிவு போலீஸார் தீவிர விசாரணை

By ஆர்.சிவா

மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த 100-க்கும் அதிகமான வர்கள் தமிழகத்தில் பதுங்கி இருக்கலாம் என்ற கோணத்தில் க்யூ பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் 2002-ம் ஆண்டு மாவோயிஸ்ட் இயக்கத்தினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவரது மனைவி சந்திரா (53), உறவினர் மணிவாசகம், அவரது மனைவி கலா (45) உட்பட பலரை போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில், சென்னை தாம்பரம் அருகே படப்பையில் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பதுங்கி இருப்பதை க்யூ பிரிவு போலீஸார் கண்டுபிடித்தனர். கடந்த 21-ம் தேதி அங்கு சோதனை நடத்தி மதுரையைச் சேர்ந்த ரீனா ஜாய்ஸ் மேரி (32) என்ற மாவோயிஸ்ட்டை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், 2002-ம் ஆண்டு ஊத்தங்கரை காவல் நிலையம் மீதான தாக்குதலில் ஈடுபட்டு தலைமைறைவாக உள்ள கலாவும்,சந்திராவும் கரூரில் பதுங்கி இருப்பது தெரிந்தது.

அதைத் தொடர்ந்து திருச்சி க்யூ பிரிவு போலீஸார் கரூரில் பதுங்கி இருந்த சந்திரா, கலா இருவரையும் கைது செய்தனர். 3 பெண் மாவோயிஸ்ட்களும் நீதி மன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

நகருக்குள் பதுங்கல்

இது தொடர்பாக க்யூ பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மாவோயிஸ்ட்களின் முதல் நோக்கமே மக்களைத் திரட்டி அரசுக்கு எதிராக போராடுவதுதான். சீனாவில் மாசே துங் (மாவோ) மக்களைத் திரட்டி கொரில்லாப் போரில் ஈடுபட்டார். அதையே இந்தியாவிலும் மாவோயிஸ்ட்கள் பின்பற்றி வருகின்றனர். இந்தியாவில் பிஹார், ஆந்திரா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் பலமாக உள்ளனர். ஆனால் தென்னிந்தியாவில் கேரளா, ஆந்திராவில் மட்டும் மிகமிக குறைவாக எண்ணிக்கையில் உள்ளனர். தமிழகத்தில் அவர் களால் காலூன்ற முடியவில்லை. ஆனால் சமீபகாலமாக இந்த நிலை மாறிவிட்டது.

தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளைப் பிடித்து, புரட்சிகர பகுதியாக மாற்றும் திட்டத் துடன் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதற்காக தமிழகத் தில் உள்ள சிலருடன் சேர்ந்து திட்டம் தீட்டி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு கட்சியும் உதவி செய்து வருகிறது. மலைப்பாங்கான இடங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களை வைத்து வட மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் வளர்ந்தனர். ஆனால், தமிழகத்தில் இப்படி செய்ய முடியவில்லை. இதனால் நகருக்குள் வந்து தங்களது இயக்கத்துக்கு ஆள் திரட்டும் பணியில் முதல்கட்டமாக ஈடுபட்டுள்ளனர்.

சென்னை புறநகர் பகுதிகளில் இவர்கள் தீவிரமாக செயல்படு வதை கண்டுபிடித்து இருக்கிறோம். மாவோயிஸ்ட்களில் ஆயுதப் பிரிவும் உள்ளது. தமிழகத்தில் 30-க்கும் அதிகமான ஆயுதப்பிரிவு மாவோயிஸ்ட்களும், நூற்றுக்கும் அதிகமான மாவோயிஸ்ட் அமைப் பினரும் இருக்க வாய்ப்பிருக்கிறது. இவர்கள் அமைதியாக செயல்பட்டு தங்களது இயக்கத்தை வளர்த்து வருகின்றனர்.

ஆந்திரம், கேரளத்தில் மாவோ யிஸ்ட்கள் மற்றும் நக்சல்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்படுவதால் அவர்கள் அண்டை மாநிலமான தமிழகத் துக்கு தப்பி வருகின்றனர். இங்கிருக்கும் சிலரின் உதவியால் பலர் இப்படி வந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் பிடிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் நக்சலைட்களும், மாவோயிஸ்ட்களும் பதுங்கியிருப் பதாக ‘தி இந்து'வில்(தமிழ்) 02-01-2015 அன்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்