வைகை பழைய பாசனப் பகுதிகள் 3 மற்றும் 2-க்கு வைகை அணையிலிருந்து நாளை (21-ம் தேதி) முதல் தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை மாவட்டம், வைகை அணையிலிருந்து, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை பழைய பாசனப் பகுதிகள் 3 மற்றும் 2-க்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு விவசாய பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை பழைய பாசனப் பகுதிகள் 3 மற்றும் 2-க்கு வைகை அணையிலிருந்து 21.11.2014 முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்படுகிறது.
இதனால், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 1,09,620 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்" இவ்வாறு முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 mins ago
தமிழகம்
17 mins ago
இந்தியா
10 mins ago
விளையாட்டு
26 mins ago
வாழ்வியல்
35 mins ago
ஓடிடி களம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தொழில்நுட்பம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago