10-ம் வகுப்பு தேர்வில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி

By செய்திப்பிரிவு

10-ம் வகுப்பு தேர்வில் வழக்கம் போல் மாணவர்களை விடவும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10-ம் வகுப்பு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை தலைமை அலுவலகத்தில் தேர்வு முடிவுகள், பள்ளிகளின் தேர்ச்சி நிலை விவரங்களை அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி காலை 10 மணிக்கு வெளியிட்டார். ரேங்க் முறை இல்லாத 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் முதல்முறையாக வெளியிடப்பட்டது.

2017-ம் ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் பொறுத்தவரையில் கடந்த மூன்று ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.4%.

மாணவிகளே அதிகம்

வழக்கம்போல் மாணவிகளே மாணவர்களைவிட அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம்: 96.2%. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 92.5%. மாணவர்களை விட மாணவிகள் 3.7% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2014-ம் ஆண்டு மாணவர்கள் 88.0% தேர்ச்சி பெற்றனர். 2015-ம் ஆண்டு 90.5% தேர்ச்சி பெற்றனர். 2016-ம் ஆண்டு 91.3% தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு மாணவர்கள் 92.5% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2014-ம் ஆண்டு மாணவிகள் 93.6% தேர்ச்சி பெற்றனர். 2015-ம் ஆண்டு 95.4% தேர்ச்சி பெற்றனர். 2016-ம் ஆண்டு 95.9% தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு மாணவிகள் 96.2%. தேர்ச்சி பெற்றுள்ளனர்.











VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்