பணம் விநியோகித்ததாக புகார்: திமுக பிரமுகர் கைது

By செய்திப்பிரிவு

ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட காசிமேடு சூரியநாராயணன் தெருவில் சிலர் வாக்காளர் களுக்கு பணம் விநியோகிப்ப தாக பறக்கும் படை அதிகாரி கதிர்வேலுக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் அங்கு விரைந்து சென்றார். அவருக்கு உதவியாக காசிமேடு போலீஸாரும் சென்றனர்.

பணம் விநியோகம் செய்தது தொடர்பாக ஒருவரைப் பிடித்து காசிமேடு காவல் நிலை யத்துக்கு அழைத்துச் சென்ற னர். பிடிபட்டது பம்மல் நகர திமுக செயலாளர் கருணாநிதி என்பது தெரியவந்தது. உடனடி யாக அவர் கைது செய்யப் பட்டார். அவரிடம் இருந்து ரூ.17 ஆயிரத்தையும் அவர் ஓட்டி வந்த காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து காசிமேடு போலீ ஸார் கூறும்போது, ‘‘பம்மல் நகர செயலாளர் கருணாநிதியை கைது செய்தது உண்மைதான். அவரை ஜாமீனில் விடுவித்து விட்டோம்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

11 mins ago

இந்தியா

21 mins ago

விளையாட்டு

10 mins ago

இந்தியா

26 mins ago

தமிழகம்

48 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

13 hours ago

மேலும்