பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறியுள்ளதைத் தொடர்ந்து வரும்18-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது.
வியாழக்கிழமை அன்று பதவியேற்க எடப்பாடி பழனிசாமியை அழைத்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், 15 தினங்களுக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கூறியிருந்தார்.அதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமியும், அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் நாளை 18-ம் தேதி கூடுவதாக அறிவிப்பு வெளியானது.
இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவை செயலாளர் அ.மு.பி.ஜமாலுதீன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர், பேரவையின் அடுத்தக்கூட்டத்தை பிப்ரவரி 18-ம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு கூட்டியுள்ளார். அப்போது அமைச்சரவை மீது நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
உலகம்
7 mins ago
இந்தியா
52 mins ago
க்ரைம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
கல்வி
1 hour ago
விளையாட்டு
2 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago