தனியார் பாலில் கலப்படம் குறித்து ஏன் விசாரணை நடத்தவில்லை?- ஸ்டாலின் கேள்வி

By செய்திப்பிரிவு

தனியார் பாலில் கலப்படம் நடப்பது உண்மையென்றால் ஏன் விசாரணை நடத்தவில்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார் நிறுவனங்களில் பாலில் ரசாயனங்கள் கலக்கப்படுவதாக கூறுகிறார், அப்படி செய்தால் அதை தடுக்க வேண்டிய பொறுப்பு அவருடையது, பாலில் கலப்படம் உள்ளது என்றால் ஏன் அது குறித்து விசாரணை நடத்தப்படவில்லை.

எனவே பால் கலப்படம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும். மாடுகள் விற்க தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்து ஏற்கனவே விரிவான அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டது போல் மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஏழை எளிய விவசாய மக்களை பெரிதும் பாதிக்கும். நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு அது ஊறு விளைவிக்கும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

17 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

55 mins ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்