‘நீட்’ தேர்வுக்கு 10 லட்சம் பேர் விண்ணப்பம்

By செய்திப்பிரிவு

‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவடைந்தது. நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ‘நீட்’ தேர் வுக்கு விண்ணப்பித்திருப்பதாக கூறப்படுகிறது.

நாடுமுழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல் கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (‘நீட்’ - NEET) மூலமாக நடத்தப்படுகிறது. ‘நீட்’ தேர்வுக்கு மாணவர்கள் www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் சென்று ஜனவரி 31-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித் திருந்தது. அதன்படி ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.

இதுதொடர்பாக சிபிஎஸ்இ அதி காரிகளிடம் கேட்டபோது, “கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வுக்கு 8 லட்சத்து 2 ஆயிரத்து 594 பேர் விண் ணப்பித்திருந்தனர்.

இந்த ஆண்டு வரும் மே 7-ல் நாடு முழுவதும் 1,500 இடங்களில் நடைபெறும் ‘நீட்’ தேர்வுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண் ணப்பித்திருப்பார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. தமிழ், ஆங் கிலம், இந்தி உள்ளிட்ட 9 மொழிகளில் தேர்வு நடைபெறு கிறது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

25 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

34 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

54 mins ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்