தமிழக மக்களின் நலன் காக்க தகுதி படைத்தவர் ஓபிஎஸ் மட்டுமே: பொன்னையன் பேச்சு

By செய்திப்பிரிவு

நல்ல தலைமையின் கீழ் அதிமுக இயங்க வேண்டும். தமிழக மக்களின் நலன் காக்க தகுதி படைத்தவர் ஓ.பன்னீர்செல்வம் மட்டுமே'' என்று அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் கூறினார்.

சசிகலாவுக்கு ஆதரவாக இருந்த அதிமுக மூத்த தலைவர் பொன்னையன், பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு வந்து, திடீர் ஆதரவு தெரிவித்தார்.

அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பொன்னையன் கூறியதாவது:

''தொண்டர்களின் விருப்பத்துக்கேற்ப கட்சி, ஆட்சித் தலைமை இருக்க வேண்டும். மக்களின் கருத்துகளுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும். தொண்டர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவரே பொதுச் செயலாளராக வர முடியும்.

ஜெயலலிதாவால் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் செயல்படுவர் ஓ.பன்னீர்செல்வம்தான் அண்ணாவைப் போல் அடக்கத்தோடு பணியாற்றுபவர்.

ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் புத்துயிர் அளித்தவர் ஓபிஎஸ். நல்ல தலைமையின் கீழ் அதிமுக இயங்க வேண்டும். தமிழக மக்களின் நலன் காக்க தகுதி படைத்தவர் பன்னீர்செல்வம் மட்டுமே'' என்று பொன்னையன் கூறினார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்