தமாகாவில் 6 புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனம்

By செய்திப்பிரிவு

தமாகாவில் சென்னையில் உள்ள 4 மாவட்டங்கள் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு புதிய மாவட்டத் தலைவர்களை கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நியமித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமாகாவில் 6 புதிய மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அதன்படி, வடசென்னை தெற்கு மாவட்டத்துக்கு ராயபுரம் பாலா, தென்சென்னை வடக்கு மாவட்டத்துக்கு சைதை மனோகரன், மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்துக்கு வில்லிவாக்கம் ரவிச்சந்திரன், மத்திய சென்னை மேற்கு மாவட்டத்துக்கு அண்ணாநகர் ராம்குமார், நாகப்பட்டினம் தெற்கு மாவட்டத்துக்கு என்.எஸ்.நாராயணசாமி, பெரம்பலூர் மாவட்டத்துக்கு கிருஷ்ண ஜனார்தனன் ஆகியோர் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த எஸ்.சவுந்தர் முருகன், கட்சியின் மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் மீனவர் அணி மாநிலத் தலைவராக பி.ஜி.நலமகாராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்'' என்று ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

17 mins ago

இந்தியா

20 mins ago

வேலை வாய்ப்பு

32 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்