ஒரு கார்கூட இறக்குமதி செய்யவில்லை- நீதிமன்றத்தில் அலெக்ஸ் ஜோசப் தகவல்

By செய்திப்பிரிவு

வெளிநாட்டில் இருந்து ஒரு கார்கூட இறக்குமதி செய்த தில்லை என்று தொழிலதிபர் அலெக்ஸ் ஜோசப் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ் ஜோசப். வெளிநாட்டு கார்கள் இறக்குமதி செய்ததில் சுங்கத் துறை விதிமுறைகளை மீறி அலெக்ஸ் ஜோசப் செயல்பட்டதாகவும் இதனால் அரசுக்கு ரூ.48 கோடி வரி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக வும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் அலெக்ஸ் ஜோசப்பை டெல்லி யில் சி.பி.ஐ. அதிகாரிகள் பிப்.1ம் தேதி கைது செய்தனர். அவர் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி வணங்காமுடி முன்பு திங்கள்கிழமை ஆஜர்படுத்தப் பட்டார். அவரை 3 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.இதற்கிடையே தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் அலெக்ஸ் ஜோசப் ஒரு மனு தாக்கல் செய்தார். ‘‘நான் வெளிநாட்டில் இருந்து ஒரு கார்கூட இறக்குமதி செய்த

தில்லை. என் மீதான குற்றச் சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை. சி.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக உள்ளேன்’’ என்று மனுவில் அவர் கூறியிருந் தார்.

ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி வணங்காமுடி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்