சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது: சென்னை அண் ணாநகரைச் சேர்ந்த முபாரக் என்பவர், கடந்த மாதம் 21-ம் தேதி தன் வீட்டின் முன் நிறுத்தப் பட்டிருந்த புல்லட் வாகனம் திருடப்பட்டதாக திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரி வித்திருந்தார். அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த பென் சாமுவேல் என்பவரும் கடந்த மாதம் 30-ம் தேதி, வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த புல்லட் திருடப் பட்டதாக புகார் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, புல்லட் வாகனத் திருட்டில் ஈடுபட்ட நபரை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டது. இப்படையினர், நேற்று அதிகாலை பாடி மேம்பாலம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, புல்லட் வாகனத் தில் வந்த நபரை நிறுத்த அறிவு றுத்தியபோது, நிறுத்தாமல் சென் றதால், அவரை விரைந்துசென்று தனிப்படையினர் மடக்கி பிடித்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணை யில், அவர் கொளத்தூர் பொன்னி யம்மன் மேடு பகுதியைச் சேர்ந்த கமாலுதீன் (19) என்பதும், இவர் உடற்பயிற்சி கூட பயிற்சியாளராக இருப்பதும், அவர் ஓட்டிவந்தது திருட்டு புல்லட் என்பதும், பல்வேறு இடங்களில் புல்லட் களை அவர் திருடியதும் தெரிய வந்தது. அவரிடமிருந்து 7 புல் லட்கள் மற்றும் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதை யடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
12 mins ago
சினிமா
2 mins ago
உலகம்
59 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
கல்வி
2 hours ago