டிடிவி தினகரனுடன் மேலும் 2 எம்எல்ஏக்கள் சந்திப்பு: ஆதரவு எண்ணிக்கை 34 ஆக உயர்வு

By செய்திப்பிரிவு

அதிமுக அம்மா கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரனை மேலும் 2 எம்எல்ஏக்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் டிடிவி. தினகரனை அதிமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் கடந்த சில நாட்களாக சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், தோப்பு வெங்கடாச்சலம் உள்ளிட்ட 27 எம்எல்ஏக்கள் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

அதற்குப் பிறகு ஏ.கே.போஸ் (திருப்பரங்குன்றம்), பி.பெரியபுல்லான் (எ) செல்வம் (மேலூர்), பி.நீதிபதி (உசிலம்பட்டி), பி.எம்.நரசிம்மன் (திருத்தணி), எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் (தென்காசி) ஆகியோர் தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இந்நிலையில் அம்பத்தூர் எம்.எல்.ஏ. அலெக்சாண்டர், அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்னசபாபதி ஆகிய இருவரும் டி.டி.வி.தினகரனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதன் மூலம் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

அதிமுகவில் அடுத்தடுத்து நடந்து வரும் திருப்பங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது சூழ்நிலை சாதகமாக இல்லாததால் தினகரன் பொறுமையாக இருக்க விரும்புவதாக அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏக்கள் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

39 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

48 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்