இலவச லேப்-டாப் வழங்கும் திட்டத்துக்கான டெண்டர் நடவடிக் கைகளுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து பதிலளிக்க அரசுக்கும், எல்காட் நிறுவனத்துக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அம்பத்தூர் தொழிற்பேட்டையைச் சேர்ந்த ஐசிஎம்சி நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்கும் திட்டம் அமலில் உள்ளது. கடந்த 2016-17-ம் ஆண்டில் 5 லட்சம் லேப்-டாப்களை கொள்முதல் செய்வதற்காக எல்காட் நிறுவனம் ஹெவ்லெட் அண்ட் பேக்யார்டு (ஹெச்பி) மற்றும் லெனோவா ஆகிய நிறுவனங் களுக்கு டெண்டர் வழங்கியுள்ளது.
டெண்டர் விதிகளின்படி உள்நாட்டில் லேப்-டாப் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கே டெண்டர் வழங்க வேண்டும். ஆனால் சீனாவில் தயாரிக்கப்பட்ட லேப்-டாப்களை இந்நிறுவனங்கள் இறக்குமதி செய்து பள்ளி மாணவர் களுக்கு வழங்கி வருகின்றன.
இவற்றை உள்நாட்டிலேயே தயாரித்து இருந்தால் தேவையின்றி வரி செலுத்த வேண்டிய நிலை இருக்காது. ஆனால் தற்போது இந்த லேப்-டாப்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.96 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் டெண்டர் விதிப்படி தகுதி இழந்த இந்த இரு நிறுவனங்களுக்கும் மீண்டும் டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி, இது தொடர் பாக பதிலளிக்கும்படி தமிழக அரசு மற்றும் எல்காட் நிறுவனத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூன் 19-க்கு தள்ளி வைத்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
54 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
சுற்றுலா
1 hour ago
சுற்றுச்சூழல்
2 hours ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
சுற்றுலா
3 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
4 hours ago
உலகம்
5 hours ago