ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளராக மதிவாணன் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக தேமுதிகவினர் பல குழுக்களாக பிரிந்து தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
நேற்று மாலை திருவொற்றியூர் நெடுஞ்சாலை தண்டையார்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் தேமுதிகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது தேமுதிகவின் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் கொண்ட பேனரை பிடித்துக் கொண்டு ‘எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்’ என்று மைக்கில் பேசியபடி அவர்கள் வேகமாக நடந்துச் சென்றனர்.
வாக்காளர்களை வீடுவீடாக சந்தித்து துண்டு பிரசுரங்களை கொடுத்து ஓட்டுப் போடுங்கள் என கேட்கவில்லை. இவர்கள் பிரச்சாரம் செய்கிறார்களா அல்லது பேரணி போகிறார்களா என அப்பகுதி மக்கள் கிண்டலாக பேசிக் கொண்டனர். கட்சித் தலைவர் விஜயகாந்த் உடல்நலம் சரியில்லாததால் பிரச்சாரத்துக்கு வருவது சந்தேகம் என அக்கட்சியினர் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
46 mins ago
ஜோதிடம்
49 mins ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
8 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago