தினகரன் குடும்பத்தால் கட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்பதாலேயே இந்த முடிவு: அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி

By செய்திப்பிரிவு

ஓ.பன்னீர்செல்வம் எப்போது வந்தாலும் நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயார். தினகரன் குடும்பத்தால் கட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்தில் மூத்த அமைச்சர்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடைபெற்றது.

அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, வீரமணி, அன்பழகன், சி.வி.சண்முகம், பெஞ்சமின், ஆர்.பி. உதயகுமார் மற்றும் எம்.பி. வைத்திலிங்கம் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.

ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ''தினகரனையும், அவர் சார்ந்த குடும்பத்தையும் முழுமையாக ஒதுக்கிவைக்கிறோம். தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக் கூடாது'' என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், ''ஓ.பன்னீர்செல்வம் எப்போது வந்தாலும் நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயார். தினகரன் குடும்பத்தால் கட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

51 secs ago

தமிழகம்

4 mins ago

சினிமா

12 mins ago

தமிழகம்

15 mins ago

இந்தியா

19 mins ago

தமிழகம்

26 mins ago

வணிகம்

32 mins ago

இந்தியா

35 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

49 mins ago

ஓடிடி களம்

56 mins ago

விளையாட்டு

1 hour ago

மேலும்