ஓ.பன்னீர்செல்வம் எப்போது வந்தாலும் நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயார். தினகரன் குடும்பத்தால் கட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்தில் மூத்த அமைச்சர்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடைபெற்றது.
அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, வீரமணி, அன்பழகன், சி.வி.சண்முகம், பெஞ்சமின், ஆர்.பி. உதயகுமார் மற்றும் எம்.பி. வைத்திலிங்கம் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.
ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ''தினகரனையும், அவர் சார்ந்த குடும்பத்தையும் முழுமையாக ஒதுக்கிவைக்கிறோம். தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக் கூடாது'' என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், ''ஓ.பன்னீர்செல்வம் எப்போது வந்தாலும் நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயார். தினகரன் குடும்பத்தால் கட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
51 secs ago
தமிழகம்
4 mins ago
சினிமா
12 mins ago
தமிழகம்
15 mins ago
இந்தியா
19 mins ago
தமிழகம்
26 mins ago
வணிகம்
32 mins ago
இந்தியா
35 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
49 mins ago
ஓடிடி களம்
56 mins ago
விளையாட்டு
1 hour ago