தமிழக ஆளுநராக பதவி வகித்த கே.ரோசய்யா நேற்று மாலை ஆளுநர் மாளிகையில் இருந்து விடைபெற்றார்.
கடந்த 2011 ஆகஸ்ட் 31-ம் தேதி தமிழக ஆளுநராக பதவியேற்ற ரோசய்யாவின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதியோடு முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து பொறுப்பு ஆளு நராக நியமிக்கப்பட்ட மகா ராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று முன்தினம் பதவியேற்றார்.
இந்நிலையில் முன்னாள் ஆளுநர் ரோசய்யா கிண்டி ஆளுநர் மாளிகையில் இருந்து நேற்று மாலை விடைபெற்றார். தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், திண்டுக்கல் சீனி வாசன், எடப்பாடி பழனிச் சாமி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து அவரை வழியனுப்பி வைத்தனர்.
தமிழகத்திலிருந்து விடை பெற்றுச் செல்லும் ரோசய்யாவுக்கு விமான நிலையத்தில் காவல் துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
12 mins ago
இந்தியா
22 mins ago
சுற்றுச்சூழல்
24 mins ago
இந்தியா
23 mins ago
இந்தியா
37 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
46 mins ago
இந்தியா
45 mins ago
இந்தியா
52 mins ago
இந்தியா
57 mins ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
1 hour ago