வழக்கறிஞர் சட்டத்தில் செய்யப் பட்டுள்ள திருத்தங்களை வாபஸ் பெற வலியுறுத்தி சென்னையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 146 வழக்கறிஞர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய திருத்தங்களை வாபஸ் பெற வலியு றுத்தி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழகம் முழு வதும் நேற்று வழக்கறிஞர் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் (எம்.ஹெச்.ஏ.ஏ.) சார்பில் செய லாளர் அறிவழகன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர் கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து நீதிமன்ற வளாகத்துக்குள் கோஷ மிட்டவாறு சென்றனர். பின்னர் என்.எஸ்.சி. போஸ் சாலை வழியாக பாரிமுனைக்கு சென்று கடற்கரை ரயில் நிலையத்துக்குள் செல்ல முற்பட்டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் வழக்கறிஞர்கள் மற்றும் போலீ ஸார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பிறகு பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் நளினி தலைமையில் 6 பெண்கள் உட்பட 106 பேர் கைது செய் யப்பட்டனர். இதேபோல் ஜார்ஜ் டவுன் வழக்கறிஞர் சங்கம் சார்பில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 40 வழக்கறிஞர்களை போலீஸார் கைது செய்தனர். பின்னர் இவர்கள் மதியத்துக்கு மேல் விடுவிக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
சினிமா
8 mins ago
தமிழகம்
2 mins ago
தமிழகம்
22 mins ago
இந்தியா
12 mins ago
சினிமா
30 mins ago
இந்தியா
44 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago