இலங்கை கடற்படையால் பாம்பன் நாட்டுப் படகு மீனவர் 6 பேர் சிறைபிடிப்பு

By செய்திப்பிரிவு

பாம்பனில் இருந்து 60-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க நேற்றுமுன்தினம் கடலுக்குச் சென்றனர். இவர்கள் நேற்று அதிகாலை மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

இவர்களில் எட்வின் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சுவிஸ்டன், எட்மா, வினோத், விஜய், ரோனால்ட், ஆல்வின் ஆகிய 6 மீனவர்களை அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லையை கடந்து வந்து இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்தாகக் கூறி சிறைபிடித்தனர்.

இந்த மீனவர்கள் கல்பிட்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் புத்தளம் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

இதுவரை விசைப்படகு மீனவர்களை சிறை பிடித்து வந்த இலங்கை கடற்படையினர் தற்போது நாட்டுப் படகு மீனவர்களை சிறைபிடித்திருப்பது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

ஓடிடி களம்

39 mins ago

இந்தியா

17 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

மேலும்