கேரளம் தடுப்பணைகள் கட்டுவதை தடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: முதல்வர் ஓபிஎஸ் தகவல்

By செய்திப்பிரிவு

பவானி ஆற்றின் குறுக்கே தடுப் பணைகள் கட்டும் கேரள அரசின் முயற்சிகளை தடுக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல் வர் ஓ.பன்னீர்செல்வம் தெரி வித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் அவர் பேசிய தாவது:

பாம்பாற்றின் குறுக்கே பட்டிச் சேரியில் தடுப்பணைகள் கட்டும் திட்டத்துக்கு கடந்த 3-11-2014-ல் கேரள முதல்வர் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டியதாக செய்திகள் வெளியாகின. அத னைத் தொடர்ந்து, பிரதமர் இப்பிரச்சினையில் தலையிட்டு கேரள அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசின் சார்பில் கேட்டுக்கொள் ளப்பட்டது.

பாம்பாற்றின் குறுக்கே தடுப் பணை கட்டும் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரையிலும், உச்ச நீதிமன்றத்தில் உள்ள சிவில் வழக்குகள் முடியும் வரையிலும் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் கேரள அரசுக்கு உத்தரவிடக்கோரி கடந்த 28-11-2014-ல் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தது.

இதனை வலியுறுத்தி கடந்த 5-12-2014-ல் தமிழக சட்டப்பேரவையில் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை 12-12-2014-ல் பிரதமருக்கு அனுப்பி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை கேரள அரசு எந்தவொரு புதிய திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என அறிவுறுத்துமாறு நான் வலியுறுத்தி கேட்டுக் கொண்டேன்.

இந்நிலையில் பாம்பாற்றின் குறுக்கே பட்டிச்சேரியில் அணை கட்டும் பணிகளை கேரள அரசு தொடங்கியுள்ளது என்ற செய்தி கிடைத்ததும், இதனைத் தடுத்து நிறுத்துமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். தமிழகத்தின் முன் அனுமதி பெறாமலும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவை அமைக்கப்படும் வரையிலும் கேரள அரசு எந்த வொரு திட்டத்தையும் மேற் கொள்ளக் கூடாது என்றும் நான் கேட்டுக் கொண்டுள்ளேன்.

ஏற்கெனவே, பவானி ஆற் றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டும் முயற்சி களை உடனடியாக நிறுத்தக்கோரி கடந்த 24-1-2017-ல் பிரதமருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். அதனைத் தொடர்ந்து கேரள அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக்கோரி உச்ச நீதிமன் றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்ய தமிழக அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

33 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்