திரையரங்கு ஊழியர் கொலையில் திடீர் திருப்பம்: மனைவி உட்பட 2 பேர் கைது

By செய்திப்பிரிவு

திரையரங்கு ஊழியர் கொலை யில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள் ளது. மனைவி, அவரது ஆண் நண்பர் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மேடவாக்கம் காந்தி நகர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் அறிவழகன் (35). இவர் சென்னையில் உள்ள திரை யரங்கில் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப் பட்டார். இது தொடர்பாக விசா ரித்து வந்த பள்ளிக்கரணை போலீஸார், மனைவி சுரேகா, அவரது ஆண் நண்பர் கணபதி ஆகியோரை கைது செய் துள்ளனர். இது குறித்து போலீஸார் கூறியதாவது:

அறிவழகன் வசித்து வந்த பகுதியிலேயே கணபதி என்ப வரும் வசித்து வந்தார். அவருக் கும் சுரேகாவுக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இதை அறிவழ கன் பலமுறை கண்டித்துள்ளார். எனவே கணபதியுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய சுரேகா திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த புத் தாண்டின்போது தமது வீட்டின் அருகிலேயே மது அருந்திய இளைஞர்களை அறிவழகன் தட்டிக்கேட்டதால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி அவர்கள் மீது பழி போடும் நோக்கத்துடன், கண பதியை நள்ளிரவில் வீட்டுக்கு அழைத்துள்ளார் சுரேகா. இரு வரும் சேர்ந்து அறிவழகனை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர்.

சுரேகாவிடம் விசாரித்த போது நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் அறிவழகனை வெட்டி கொலை செய்ததாகவும், அந்த கும்பல் தன்னையும் தாக்கியதாகவும் கூறிவிட்டு மயங்கி விழுந்தார்.

அறிவழகனின் குழந்தை சாதனாவிடம் விசாரித்தபோது, சுரேகாவுக்கும் கணபதிக்கும் இடையே தகாத உறவு இருந்ததும், அவர்கள் இருவரும் சேர்ந்து அறிவழகனை கொலை செய்ததும் தெரியவந்தது. எனவே சுரேகா, கணபதி ஆகி யோரை கைது செய்துள்ளோம் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

தமிழகம்

8 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்