சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 1.30 மணிக்கு சிங்கப்பூர் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.
சென்னையை சேர்ந்த சம்பூர்ராஜ் (38) என்பவரின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது சூட்கேசில் ரூ.3 லட்சம் (இந்திய ரூபாய்) மறைத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பணத்திற்கான உரிய ஆவணம் இல்லாததால், அவருடைய சிங்கப்பூர் பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர். அதன்பின் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.3 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதே போல சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 2 மணிக்கு கொழும்பு செல்லும் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதிகாரிகளின் சோதனையின் போது இலங்கையை சேர்ந்த ரத்தின யாகா (42) என்பவர் பிளாஸ்கில் ரூ.1 லட்சம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரின் இலங்கை பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவரையும் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
6 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago