தடை செய்யப்பட்ட சேவல் சண்டையில் ஈடுபட்டதாக கரூர் மாவட்டத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், 13 சேவல்கள், 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் தோகைமலை அருகேயுள்ள மேலகம்பேஸ்வரத்தில் தடை செய்யப்பட்ட சேவல் சண்டை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையடுத்து, சேவல் சண்டையில் ஈடுபட்ட லாலாபேட்டையை அடுத்த பிள்ளாபாளையத்தைச் சேர்ந்த பொன்னுசாமி(37) உள்ளிட்ட 5 பேர் மீது தோகைமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 11 சேவல்கள், 10 இரு சக்கர வாகனங்கள், ரூ.4,500 பறிமுதல் செய்தனர்.
இதேபோல, சின்னதாராபுரம் அருகேயுள்ள செங்கலாபுரம் காலனி 5 ரோட்டில் தடை செய்யப்பட்ட சேவல் சண்டை நேற்று முன்தினம் நடைபெற்றது. சேவல் சண்டையில் ஈடுபட்ட தும்பிவாடி 5 ரோடு நாகராஜ்(47) உள்ளிட்ட 5 பேர் மீது சின்னதாராபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். மேலும் 2 சேவல்கள், ரூ.250 பறிமுதல் செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 mins ago
வணிகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தொழில்நுட்பம்
2 hours ago
சினிமா
3 hours ago
க்ரைம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
4 hours ago
க்ரைம்
5 hours ago