அதிக கட்டணம்: 400 ஆட்டோக்கள் பறிமுதல்

By செய்திப்பிரிவு

சென்னையில் அதிக கட்டணம் வசூலித்த 1,100 ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 400 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்று போக்குவரத்து துறையினரும் போலீஸாரும் இணைந்து சோதனை நடத்திவருகின்றனர். இதுகுறித்து கேட்டபோது போக்குவரத்து ஆணைய அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் தெரிவித்ததாவது:

ஆட்டோக்களில் நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிக கட்டணம் வசூல், விதிமுறைகள் மீறல், ஆவணங் கள் சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளை போக்குவரத்து துறையினர், போலீஸார் இணைந்து செய்துவருகிறோம். விதிமுறை மீறல், அதிக கட்டணம் வசூல் கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.100 முதல் அதிகபட்சம் ரூ.2,500 வரை அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 1,100 ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 400 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

வாழ்வியல்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

13 hours ago

ஓடிடி களம்

13 hours ago

மேலும்